states

img

உ.பி.யில் ரசாயண தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி  

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ரசாயண தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் தொழிற்சாலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

முதற்கட்ட விசாரணையில், ரசாயண தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.